அருங்காட்சியக பொறுப்பாளர் எழுத்துத் தேர்வு: மே 25-க்கு மாற்றம்

அருங்காட்சியக பொறுப்பாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை


அருங்காட்சியக பொறுப்பாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
   அருங்காட்சியக பொறுப்பாளர் காலியிடங்களை நிரப்ப வரும் 19-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 19-இல் நடைபெறவுள்ளது. 
 இந்தத் தேர்தலை கருத்தில் கொண்டும், ஒரு சில நிர்வாகக் காரணங்களுக்காகவும் வரும் 19-இல் நடைபெறவிருந்த தேர்வு வரும் 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com