தமிழ்நாடு
உதயநிதி வருகை: திமுக-வினருக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்
உதயநிதி வருகையையொட்டி திமுக-வினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன் வழங்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை புகார் எழுந்துள்ளது.
உதயநிதி வருகையையொட்டி திமுக-வினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன் வழங்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை புகார் எழுந்துள்ளது.
நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடலூரில் நடைபெறும் பிரசாரத்துக்காக உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி 300 திமுகவினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், பெட்ரோல் நிரப்ப வந்த 165 பேரின் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.