சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து 3 பேர் உயிரிழப்பு

சென்னை அருகே ஃப்ரிட்ஜ் வெடித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள வீடு ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்புப் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட தகவல் படி ஃப்ரிட்ஜ் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 3 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com