கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், கீரநத்தம்பகுதியில் வீடு ஒன்றில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.