சபாநாயகர் தனபாலை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28-இல் தொடங்கி, ஜூலை 30-ஆம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 23 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடக்க உள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் தனபாலை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் மீது திமுக தரப்பில் தரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக இருவரும் ஆலோசித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் ஜூலை 1ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.