தமிழ்நாடு
விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாதம் அவகாசம்: தமிழக அரசு அரசாணை
விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சென்னை: விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே வரன்முறை செய்வதற்கான அவகாசம் 24 மாதங்கள் என்ற நிலையில் இருக்கும் போது தற்போது அவகாசத்தை 30 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்து கொள்ள கட்டட உரிமையாளர்களுக்கு மேலும் அவகாசம் கிடைத்துள்ளது.