2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு

தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை  ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை  ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்விற்கு வரும் 24-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் ஆசிரியர் தேர்வு வாரிய  இணையதளத்தில் (http://trb.tn.nic.in/)  வெளியிடப்பட்டுள்ளது.
பாட வாரியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை: 
தமிழ்    319 
ஆங்கிலம்    223 
கணிதம்    279 
இயற்பியல்    210 
வேதியியல்     56 
தாவரவியல்    154 
விலங்கியல்    144 
வரலாறு    104 
புவியியல்    11 
பொருளாதாரம்    211 
வணிகவியல்    99 
அரசியல் அறிவியல்    14 
உடற்கல்வியியல்    16 
உயிர்வேதியியல்    1 
நுண்ணுயிரியியல்    1 
மனையியல்    1 
இந்திய பண்பாடு    1 
என மொத்தம் -2144 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆன்லைன் முறையில் இந்தத் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com