தமிழகத்தில் மேற்கு, தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை அய்வு மையம்

தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை அய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு, தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை அய்வு மையம்


சென்னை: தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை அய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, இதுவரை வட மேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது நாளை புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். 

மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில்  அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அதே சமயம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, கடலூர், புதுவை, பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com