பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 3 முதல் வழங்கப்படும்

 பிளஸ் 2 பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு ஜூன் 3-ஆம் தேதி முதல் பள்ளிகள்,  தனித் தேர்வு மையங்களில் வழங்கப்படவுள்ளன.


 பிளஸ் 2 பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு ஜூன் 3-ஆம் தேதி முதல் பள்ளிகள்,  தனித் தேர்வு மையங்களில் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் பிளஸ் 1,  பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (மறுகூட்டல்,  மறுமதிப்பீடு உள்பட) அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும்,  தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும்  ஜூன் 3-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பெற்றுக் கொள்ளலாம். 
 பிளஸ் 1,  பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும்,  பிளஸ் 1 (600 மதிப்பெண்கள்)  மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். 
பிளஸ் 1 பொதுத் தேர்விலோ அல்லது பிளஸ் 2 பொதுத்தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு,  அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும்.  இந்த மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்கண்ட இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com