சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததையடுத்து, தமிழக மக்கள் சார்பில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்கலத்தை இன்று விண்ணில் ஏவியது நமது நாட்டின் பெருமை சார்ந்த விஷயம். இது இந்தியா மற்றும் இஸ்ரோவின் வரலாற்றுச் சாதனையாகும்.
நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாகத் தரையிறக்குவதற்கான திறன் கொண்டுள்ள மிகக் குறிப்பிட்ட சில நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்ததற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக மனதார எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சாதனையின் மூலம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு மாணவர்கள் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள்" என்றார்.
முன்னதாக, இன்று பிற்பகல் 2.43 மணியளவில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.