அத்திவரதர் பெருவிழாவால் காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக 2.75 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். நெரிசலில் சிக்கி, இதுவரை 6 பேர் இறந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அத்திவரதர் வைபவத்துக்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் உள்ளனர். மேலும் கூடுதல் தன்னார்வலர்கள் உதவி செய்ய அழைப்பு விடுக்கிறோம் என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.