தமிழகத்தில் எப்போதும் ‘மம்மி’ ஆட்சிதான்! அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் எப்போதும் ‘மம்மி’ ஆட்சிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் எப்போதும் ‘மம்மி’ ஆட்சிதான்! அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் எப்போதும் ‘மம்மி’ ஆட்சிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, நீட் தேர்வால் சமூக நீதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க கொண்டு வரப்பட்ட தேர்வு. ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் என்றார். 

உடனே இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மாவின் ஆட்சியும் பறந்து போய்விடும். பழைய பழமொரிகள் இக்காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான் தொடரும் என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும் பறக்கப்போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com