அண்ணாமலை பல்கலை.யில் 2021-இல் உலகத் தமிழ் மாநாடு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2021-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக


கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2021-ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் கூறினார்.
இதுகுறித்து சிதம்பரத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
11-ஆவது உலகத் தமிழ் மாநாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இது பல்கலைக்கழகத்துக்கு பெருமை. 2019-20-ஆம் ஆண்டு முதல் கல்லூரி, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வான செட் தேர்வை (நற்ஹற்ங் உப்ண்ஞ்ண்க்ஷண்ப்ற்ஹ் பங்ள்ற்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3 ஆண்டுகளுக்கு நடத்தி தேர்வு செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு இந்தத் தேர்வை அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது என்றார் அவர். இதுகுறித்து பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் அரங்க பாரி கூறுகையில், உலகத் தமிழ் மாநாடு  ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது இதுவே முதல் முறை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com