தமிழக காவல்துறையில் உள்ள ஆயுதப்படையில் உள்ள துணை ஆணையர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மாற்றல் உத்தரவு விவரம் (அடைப்புக்குள் பழைய பதவி).
கே.சௌந்தர்ராஜன்-சென்னை கமாண்டோ பள்ளி துணை ஆணையர் (சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர்).
என்.டி.ரமேஷ்-சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் (சென்னை கமாண்டோ பள்ளி துணை ஆணையர்).
ஆர்.ரவிச்சந்திரன்-சென்னை பரங்கிமலை ஆயுதப்படை துணை ஆணையர் (சென்னை வாகனப்பிரிவு துணை ஆணையர்).
ஜி.சோமசுந்தரம்-சென்னை வாகனப்பிரிவு துணை ஆணையர் (சென்னை பரங்கிமலை ஆயுதப்படை துணை ஆணையர்) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
105 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்: இதேபோல தமிழகம் முழுவதும் சிபிசிஐடி,எஸ்பிசிஐடி,பொருளாதார குற்றப்பிரிவு, சிறப்பு புலனாய்வுப் பிரிவு,போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு,போக்குவரத்து பிரிவு, ஆயுதப்படை பிரிவு ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் 105 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு ராஜ்பால் தெற்கு மண்டலத்துக்கும், ஐஸ்ஹவுஸ் கிருஷ்ணமூர்த்தி சிபிசிஐடிக்கும்,காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுஜாதா,ஷீலா மேரி ஆகியோர் சிபிசிஐடிக்கும், தங்கத்துரை, சசி குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், அடுத்த சில நாள்களில் பொறுப்பு ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.