ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவி திட்டம்: 24-ல் தொடக்கம்

 ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் புதிய திட்டம் வரும் 24- ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


 ஏழைகளுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் புதிய திட்டம் வரும் 24- ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
அன்றைய தினம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் ஆகும். கஜா புயல் கடுமையான வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள் சுமார் 60 லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவியாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதற்கான அரசு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் புதிய திட்டத்தை வரும் 24-ஆம் தேதி தொடங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com