இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். 
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். 

ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்தனர். 

மேலும் அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com