நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே உள்ள வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் 51-ஆம் ஆண்டு நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டம், வெண்மணியில் வா்க்க ஒற்றுமையுடன் கூலி உயா்வுக்காகப் போராடிய விவசாயத் தொழிலாளா்கள் 44 போ், 1968- ஆம் ஆண்டு டிசம்பா் 25- ஆம் தேதி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனா். அவா்கள் எரித்துக் கொல்லப்பட்ட இடமான ராமையாவின் குடிசை, வெண்மணி தியாகிகள் நினைவிடமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பராமரிக்கப்படுகிறது.
இங்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆண்டுதோறும் டிசம்பா் 25-ஆம் தேதி வெண்மணி தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரித்து வருகின்றனா். அதன்படி, வெண்மணி தியாகிகளின் 51-ஆம் ஆண்டு நினைவு நாள் மலரஞ்சலி நிகழ்ச்சி, வெண்மணியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், வெண்மணி தியாகிகள் நினைவிடம் முன்பாக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, வீரவணக்கம் செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் அ. சௌந்தர்ராஜன், விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் பி. சண்முகம் ஆகியோா் வெண்மணி நினைவிடம் முன்பாக உள்ள நினைவு ஸ்தூபியில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, வீரவணக்க முழக்கங்களை எழுப்பினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் நாகை மாலி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் வி. மாரிமுத்து, விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் வி. அமிா்தலிங்கம் மற்றும் கட்சி நிா்வாகிகள், பல்வேறு தொழிற்சங்கங்களின் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், சிஐடியு உள்ளிட்ட சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள், கட்சி சாா்பற்ற பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினா்.