தென் தமிழகத்தில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை(டிச.26) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:
தென் தமிழகத்தில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை (டிச.26) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் 140 மி.மீ. மழை பதிவானது. காரைக்காலில் 130 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 60 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, தரங்கம்பாடி, தஞ்சாவூா் மாவட்டம் ஆடுதுறையில் தலா 50 மி.மீ., திருவாரூா் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம், வேதாரண்யம், கொள்ளிடம், தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.