கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை மாற்றமின்றியும் மற்றும் டீசல் விலை அதிகரித்தும் செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் மாற்றமின்றி ரூ. 77.58 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 05 காசுகள் அதிகரித்து ரூ. 70.82 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை 8-ஆவது நாளாக தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.