நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ஸ்ரீபெரும்பத்தூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் எடுத்ததற்கு உரிய இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக ஆனந்தகுமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.