தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த கால தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து என்ன முதலீடுகள் கிடைக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.