அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில், பூடி-ரேணிகுண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேவையில் மாற்றம் உள்ள ரயில்கள்: சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்எம்டி-க்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி இயக்கப்படும் ரயில் புத்தூர்-பூடி இடையே நின்று செல்லும் என்பதால், ரேணிகுண்டாவை 100 நிமிடங்கள் தாமதமாக அடையும்.
சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இயக்கப்படும் ரயில், அரக்கோணத்தை 30 நிமிடங்கள் தாமதமாக அடையும்.
சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்டிஎம்க்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இயக்கப்படும் ரயில் அரக்கோணத்தை 30 நிமிடங்கள் தாமதமாக அடையும்.
சென்னை மூர்மார்க்கெட்-அரக்கோணத்துக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி இயக்கப்படும் ரயில் திருவள்ளூரில் நிறுத்தப்படும். பின்னர் திருவள்ளூரில் இருந்து பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி இயக்கப்படும்.