மத்திய அரசு மீது புகார் கூறுவது ஏற்புடையதல்ல: இல.கணேசன்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு மத்திய அரசை குற்ற ஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
மத்திய அரசு மீது புகார் கூறுவது ஏற்புடையதல்ல: இல.கணேசன்


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு மத்திய அரசை குற்ற ஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
மதுரை பீ.பீ. குளத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:  ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு, மத்திய அரசு மீது களங்கம்  சுமத்தப்படுகிறது. அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதற்கும்,  மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.  
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு ப.சிதம்பரத்துக்கு உண்டு என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com