சென்னை: வரும் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தேதி மாற்றப்படுவதாக, பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் 24-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமானது தேதி மாற்றப்பட்டு, வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்' என்று கூறப்பட்டுள்ளது.