தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல்தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை www.trb.tn.nic என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (தாள் 1, தாள் 2) கடந்த ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
இந்தத் தேர்வை மொத்தமாக 5.88 லட்சம் பேர் எழுதினர். முதல் தாள் தேர்வை 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.
இதையடுத்து தேர்வுகளுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைக் குறிப்புகள் (Tentative Key Answers) பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு www.trb.tn.nic என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.