தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும். வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும். அதிகபட்சமாக வேலூர் மாவட்டம், ஆலங்காயத்தில் 15 செ.மீ., மழைப் பதிவானது. இவ்வாறு அவர் கூறினார்.