சென்னை: மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளதாக நம்பகமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இருந்து வெளியாகும் தகவல்கள் யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. எனவே மத்திய அரசு இதர்க்கு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு பொருளாதார நிலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.