நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் பள்ளி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 4 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
ஆற்றில் குளிக்க வந்தவர்கள் ஒரு ஆண், 2 பெண்கள், 3 சிறார்கள் என்று கூறப்பட்டது. ஒரு சில தகவல்கள் 6 பேரும் பள்ளிச் சிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதுவரை எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட பள்ளமான பகுதிக்கு 6 பேரும் சென்றதால், இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.