சென்னை: தென் தமிழகத்தில் நாளை ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமையன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிழக்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதால் தென் தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.