டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க- அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? கமல்ஹாசன் கேள்வி
ஆனால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி 14.2 ஓவர்களில் 55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் மட்டும் 13 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4, மொயின் அலி, டைமல் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கி இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.