டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்குத் திரும்பிய வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள்

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களில் நான்கு பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், மெரிவாலா, கரண் சர்மா, ஷாபாஸ் அகமது, கே. கெளதம், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்திய அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களாகத் தேர்வானார்கள். ஐபிஎல் போட்டியில் விளையாடிய இவர்கள் நாடு திரும்பாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி, இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்கள். 

இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. இதன் காரணமாக வலைப்பயிற்சி வீரர்களாகத் தேர்வான கரண் சர்மா, ஷாபாஸ் அகமது, கே. கெளதம், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்தியாவுக்குத் திரும்பும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதன்படி நால்வரும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள். 

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கிய பிறகு வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் வீரர்கள் ஈடுபட மாட்டார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பினால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாட முடியும் என தேர்வுக்குழுவினர் கருதினார்கள். அவர்களால் டி20 ஆட்டங்களிலும் விளையாடி பயிற்சி பெற முடியும். மேலும் வெயில் அதிகமாக உள்ளதால் வலைப்பயிற்சிக்கு அதிக அளவிலான சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்பட மாட்டார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார். அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், மெரிவாலா ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து தங்கி இந்திய அணியினரின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT