டி20 உலகக் கோப்பை

ஸ்காட்லாந்திடம் தோற்றது ஏன்?: வங்கதேச அணி கேப்டன் பதில்

DIN

நடு ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்காததால் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததாக வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்நிலையில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியைத் தோற்கடித்தது ஸ்காட்லாந்து. 

முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்தது பற்றி வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியதாவது:

ஆடுகளம் நன்றாக இருந்தது. 140 ரன்களை எடுத்திருக்க முடியும். நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய ஒரு பெரிய ஓவர் எங்களுக்கு அமையவில்லை. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஆனால் பேட்டிங் குழு சரியாக விளையாடவில்லை. ஸ்காட்லாந்து அணியை 53/6 என்கிற நிலைக்குக் கொண்டு சென்ற பிறகு நாங்கள் ஆர்வத்தை இழக்கவில்லை. ஒரு விக்கெட் எடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஸ்காட்லாந்து பேட்டர்கள் சிறப்பாக விளையாடி அந்த ஸ்கோரை எடுத்தார்கள். 140 ரன்களை விரட்ட முடியவில்லையென்றால் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய வேண்டும். அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT