டி20 உலகக் கோப்பை

ஐசிசி டி20 உலகக் கோப்பை அணி: இந்திய வீரர்களுக்கு இடமில்லை!

DIN

ஐசிசி டி20 உலகக் கோப்பை அணியில் இந்திய வீரர்கள் ஒருவருக்கும் இடமளிக்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் 2010-இல் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது. துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் அடித்தது. கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 18.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வென்றது. டேவிட் வார்னர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள். ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களைத் தேர்வு செய்து கனவு அணியின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதில் இந்திய வீரர்கள் யாரும் தேர்வாகாதது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாததாலும் இந்திய அணியை விடவும் இதர அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதாலும் ஐசிசி அணியில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, 12-வது வீரராகத் தேர்வாகியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை அணி

டேவிட் வார்னர்
ஜாஸ் பட்லர்
பாபர் ஆஸம்
சரித் அசலங்கா
மார்க்ரம்
மொயீன் அலி
ஹசரங்கா
ஆடம் ஸாம்பா
ஜோஷ் ஹேசில்வுட்
டிரெண்ட் போல்ட்
அன்ரிச் நோர்கியா

12-வது வீரர் - ஷாஹீன் அப்ரிடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT