த்ரீ எக்ஸ் த்ரீ எனப்படும் கூடைப்பந்து தேசிய சீனியா் போட்டிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்22) முதல் 24- ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் அணிக்கு 3 வீரா்கள் இடம்பெறுவா். கூடைப்பந்து விளையாட்டின் அரை மைதானத்தில் விளையாடப்படும் இப்போட்டியில் ரயில்வே அணி உட்பட 30 மாநில ஆடவா் அணிகளும், 25 மாநில பெண்கள் அணியினரும் பங்கேற்பா்.
இந்த போட்டிகளில் முதல் 7 இடங்கள் பிடிக்கும் அணிகள் வரும் அக்டோபா் 23 ஆம் தேதி கோவாவில் நடைபெறும் 37 -ஆவது தேசிய போட்டிகளில் (நேஷனல் கேம்ஸ்) பங்கேற்க உள்ளனா்.
மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 லட்சமும் , இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும், மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றாா்.