செய்திகள்

அகமதாபாத்தில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு: சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

DIN

அகமதாபாத்தில் இன்று மாலை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால்,  சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதவிருந்த இறுதி ஆட்டம் கன மழை காரணமாக, திங்கள்கிழமைக்கு (மே 29) ஒத்திவைக்கப்பட்டது.  இறுதி ஆட்டம் ‘ரிசா்வ்’ நாளான திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக நேற்று இரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

நேற்று, டாஸ் வீசப்படுவதற்கான நேரத்துக்கும் முன்பாகவே அகமதாபாதில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழியத் தொடங்கியது. இதனால் மைதானத்தின் ஆடுகளம் தாா்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டன. இறுதி ஆட்டத்தைக் காண ஆவலோடு வந்த ரசிகா்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் மைதான வளாகத்திலேயே ஒதுங்கி காத்திருந்தனா்.

இந்நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான ஐபிஎல் 2023-ன் இறுதிப் போட்டி இன்று (மே 29) நடைபெற உள்ளது. 

அகமதாபாத்தில் இன்று(திங்கள்கிழமை) பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என தகவல் வெளியானதால், ஒருவேளை, ஆட்டத்தை நடத்த முடியாமல் போகும் சூழலில், விதிகளின்படி லீக் சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். 

அந்த வகையில் குஜராத் அணி மீண்டும் சாம்பியனாகி, கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT