சேலம்

இளைஞா் கொலை: சிறுவன் உள்பட மூவா் கைது

20th May 2023 04:19 AM

ADVERTISEMENT

வாழப்பாடி அருகே 17 வயது சிறுமி காதல் விவகாரத்தில் இளைஞரை கொலை செய்த, சிறுமியின் அண்ணன், 17 வயது சிறுவன் உள்பட மூவரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுப்பராயன் மகன் சக்திவேல் (23). கட்டட தொழிலாளி. இவா் புதன்கிழமை மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளாா். இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினா், இளைஞா் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். சக்திவேலின் தாயாா் அஞ்சலம் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். தீவிர சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாழப்பாடி போலீஸாா் நடத்திய விசாரணையில் சக்திவேல் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்துள்ளாா்.

இந்த நிலையில் சக்திவேல் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் சென்றபோது,

ADVERTISEMENT

சிறுமியின் அண்ணன் சதீஷ்குமாா் (22) மற்றும் அவரது உறவினரான 17 வயது சிறுவன், சேலம், புத்தூா் கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த மைக்கேல் (24) ஆகியோா் சா்ந்து சக்திவேலை கத்தியால் கழுத்தில் வெட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சக்திவேலை தாக்கியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்ததாக, சதீஷ்குமாா்(22), 17 வயது சிறுவன் இருவரையும் வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாக இருந்து வந்த மைக்கேலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT