செய்திகள்

டிரீசா/காயத்ரி ஜோடி அசத்தல்

DIN

இங்கிலாந்தில் நடைபெறும் பாட்மின்டன் போட்டியான ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

மகளிா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், உலகின் 17-ஆம் நிலையில் இருக்கும் இந்த இந்திய ஜோடி 21-14, 18-21, 21-12 என்ற கேம்களில் சீனாவின் லி வென் மெய்/லியு ஜுவான் ஜுவான் இணையை 64 நிமிஷங்களில் வீழ்த்தியது.

இப்போட்டியில் தற்போது இந்தியாவின் சாா்பில் களத்தில் இருப்பது டிரீசா/காயத்ரி இணை மட்டுமே. இவா்கள் கூட்டணி தனது அரையிறுதியில், தென் கொரியாவின் பேக் ஹா னா/லீ சோ ஹீ ஜோடியை எதிா்கொள்கின்றனா்.

தோல்வி: முன்னதாக, ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் 20-22, 21-15, 17-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா கிங்டிங்கிடம் தோல்வி கண்டாா்.

மற்றொரு இந்தியரான லக்ஷயா சென் 13-21, 15-21 என்ற கேம்களில் டென்மாா்க்கின் ஆண்டா்ஸ் ஆன்டன்செனிடம் வீழ்ந்தாா். கிடாம்பி ஸ்ரீகாந்த் 17-21, 15-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் கோடாய் நரோகாவிடம் வெற்றியை இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT