செய்திகள்

பயிற்சியின்போது ரோஹித்துக்கு காயம்: நாளை விளையாடுவாரா? 

6th Jun 2023 09:10 PM

ADVERTISEMENT

 

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் (நாளை) ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய அணியில் அஸ்வின் அல்லது ஜடேஜா யார் ஒருவைரைத்தான் விளையாட வைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை லண்டனில் நடைபெறுகிறது. 

இதையும் படிக்க: எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை: 10 வருடமாக ஐசிசி கோப்பை வெல்லாதது குறித்து டிராவிட் கருத்து! 

ADVERTISEMENT

இந்திய நேரப்படி தியம் 3 மணிக்கு போட்டி துவங்குகிறது. இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.  


இந்நிலையில் பயிற்சியின்போது கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. பிறகு பயிற்சியில் இருந்து வெளியேறியுள்ளார். பெரிதா ஏதும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும் நாளைதான் முழு விவரம் தெரியவரும். 

ஏற்கனவே காயம் காரணமாக பும்ரா, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்கள் டபிள்யுடிசியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT