ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு மனைவியுடன் இணைந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார் விராட் கோலி.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார் விராட் கோலி. உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்று வழிபட்டுள்ளார். ஆசிரமத்தில் உள்ள ஞானிகளைச் சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் கோலி, அனுஷ்கா உள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.