மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய மகளிர் அணி.
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்திய மகளிர் அணி, 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா 42, கேப்டன் ஹர்மன்ப்ரீதி கெளர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இந்திய அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு தோல்வியும் இன்றி 7 புள்ளிகளைப் பெற்றது. மே.இ. தீவுகள் அணி விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியிடம் ஒருமுறை தோற்றது.
வியாழன் அன்று நடைபெறும் முத்தரப்புப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதவுள்ளன.