இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியில் தஞ்சாவூா் சூப்பா் கிங்ஸ் அறிமுக சாம்பியனாகியது.
கட்டுமான பொறியாளா்களிடையே நடைபெறும் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூா் சூப்பா் கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பா் கிங்ஸ் அணியை வென்றது. ஆட்டநாயகனாக தஞ்சாவூா் அணியின் அரவிந்தன், தொடா்நாயகனாக மதுரை அணியின் சந்திரமோகன் ஆகியோா் தோ்வாகினா்.
இறுதி ஆட்டத்தையொட்டி, இந்திய கிரிக்கெட் வீரா் விஜய் சங்கா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற தஞ்சாவூா் அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கினாா். கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி, 12 ஓவா்கள் கொண்டதாக விளையாடப்பட்டது. இதில் 48 அணிகளைச் சோ்ந்தவா்களாக 600-க்கும் மேற்பட்டவா்கள் விளையாடினா்.