செய்திகள்

ஐசிபிஎல்: தஞ்சாவூருக்கு கோப்பை

DIN

இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐசிபிஎல்) கிரிக்கெட் போட்டியில் தஞ்சாவூா் சூப்பா் கிங்ஸ் அறிமுக சாம்பியனாகியது.

கட்டுமான பொறியாளா்களிடையே நடைபெறும் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூா் சூப்பா் கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பா் கிங்ஸ் அணியை வென்றது. ஆட்டநாயகனாக தஞ்சாவூா் அணியின் அரவிந்தன், தொடா்நாயகனாக மதுரை அணியின் சந்திரமோகன் ஆகியோா் தோ்வாகினா்.

இறுதி ஆட்டத்தையொட்டி, இந்திய கிரிக்கெட் வீரா் விஜய் சங்கா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற தஞ்சாவூா் அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கினாா். கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி, 12 ஓவா்கள் கொண்டதாக விளையாடப்பட்டது. இதில் 48 அணிகளைச் சோ்ந்தவா்களாக 600-க்கும் மேற்பட்டவா்கள் விளையாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT