செய்திகள்

உலக சாம்பியனை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய தெ.ஆ. அணி!

DIN


உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. 2-வது ஒருநாள் ஆட்டமும் புளூம்ஃபாண்டேனில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80, மொயீன் அலி 51, பட்லர் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார்கள். இலக்கை விரட்டியபோது தென்னாப்பிரிக்காவின் முதல் நான்கு பேட்டர்கள் அபாரமாக விளையாடினார்கள். கேப்டன் பவுமா 102 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார். மார்க்ரம் 49 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணியைக் கரை சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.    

3-வது ஒருநாள் ஆட்டம் புதன் அன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT