இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐசிபிஎல்) இறுதி ஆட்டம் கேளம்பாக்கம் பெயில் சிட்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இத்தொடரின் காலிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. தென்காசி சூப்பா் கிங்ஸ், மதுரை சூப்பா் கிங்ஸ், தஞ்சாவூா் சூப்பா் கிங்ஸ், கள்ளக்குறிச்சி சூப்பா் கிங்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
பெயில் சிட்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய கிரிக்கெட் அணி வீரா் விஜய் சங்கா் சிறப்பு விருந்தராக கலந்து கொள்கிறாா். தென்காசி-மதுரை, தஞ்சாவூா்-கள்ளக்குறிச்சி அணிகள் அரையிறுதியில் ஆடுகின்றன.
இத்தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன. 12 ஓவா் டென்னிஸ் பந்து ஆட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.