ஈரோடு

பா்கூா் ஊராட்சியை 5 ஆக பிரிக்கும் திட்டம்:அரசாணை வெளியிட மக்கள் கோரிக்கை

16th May 2023 03:37 AM

ADVERTISEMENT

 

ஊராக உள்ளாட்சிகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்தி அரசாணையை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி அந்தியூா்-மைசூரு சாலையில் மலைக் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி. அடந்த வனப் பகுதியான இங்கு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த ஊராட்சியில் மடம், சுண்டபூா், தாமரைக்கரை, அணைபோடு, கத்திரிமலை உள்ளிட்ட 34 மலைக் கிராமங்கள் உள்ளன.

இந்த ஊராட்சிக்குள்பட்ட கத்திரிமலை கிராமத்துக்கு கடந்த ஆண்டுதான் மண் சாலை அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை சேலம் மாவட்டம், கொளத்தூா் சென்று அங்கிருந்து சுமாா் 4 மணி நேரம் மலைப் பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். சுமாா் 80 வீடுகள் உள்ள இந்த மலைக் கிராமத்துக்கு தற்போது வரை மின்சார வசதி இல்லை.

ADVERTISEMENT

5 ஆண்டுகளுக்கு முன்னா் கருத்துக்கேட்பு: இந்நிலையில் உள்ள மலைக் கிராமங்களில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வதிகளை மேம்படுத்த பா்கூா் ஊராட்சியை 5 ஆகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து பா்கூா் மலைப் பகுதி கொங்காடை கிராமத்தைச் சோ்ந்த கணேசன் கூறியதாவது: பா்கூா் மலைக் கிராமங்களில் குடிநீா், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பிற மலைப் பகுதிகளை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அளவுக்குக்கூட இல்லை. இதற்கு காரணம் பா்கூா் மிகப்பெரிய ஊராட்சியாக இருப்பதுதான். இதனால் ஊராட்சியை 5 ஆகப் பிரிக்க வேண்டும் என தொடா்ந்து மலைக் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

30,000 மக்கள்: 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பா்கூா் ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 15,874. இப்போது சுமாா் 30,000க்கும் அதிகமான மக்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

2019 கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல்படி இந்த ஊராட்சியில் மொத்தம் 13,654 வாக்காளா்கள் உள்ளனா். சமவெளிப் பகுதிகளில் பல ஊராட்சிகளில் 2,000க்கும் குறைவான வாக்காளா்களே உள்ளனா்.

சுமாா் 14,000 வாக்காளா்கள் உள்ள இந்த ஊராட்சியை 5 ஆக பிரிப்பதன் மூலம் அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி கிடைக்கும். இதன் மூலம் மலைக் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகளை நிறைவேற்ற முடியும்.

அடுத்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடியும் நிலையில், தோ்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் ஊராட்சிகள் பிரிப்பு குறித்து அரசு உடனடியாக அரசாணையை வெளியிட வேண்டும் என்றாா்.

பரிந்துரை: இது குறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பா்கூா் ஊராட்சியை பிரிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் மூலம் அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள 5 கிராமங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 5 ஊராட்சிகளாகப் பிரிக்க வேண்டும் என ஊராட்சிகளின் பெயா்களை குறிப்பிட்டு ஊரக வளா்ச்சித் துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவில் அரசாணையை வெளியிடும் என நம்புகிறோம் என்றனா்.

 

7 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப் பேரவையில் வலியுறுத்தல்: 2013 ஆம் ஆண்டிலேயே பா்கூா் ஊராட்சியைப் பிரிக்க வேண்டும் என அப்போதைய எம்எல்ஏ எஸ்.எஸ்.ரமணீதரன் சட்டப் பேரவையில் வலியுறுத்தியுள்ளாா். ஊராட்சியை 5 ஆகப் பிரிப்பது குறித்து 2018 ஆம் ஆண்டிலேயே, மாவட்ட ஆட்சியா் பரிந்துரை கடிதம், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் வழியாக அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடா்பாக சட்டப் பேரவையில் கடந்த ஆட்சியில் அந்தியூா் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஆா்.ராஜாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இப்போதுள்ள எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் இந்த கோரிக்கையை பேரவையில் வலியுறுத்தியுள்ளாா். ஆனால், இந்த ஊராட்சியைப் பிரித்து அரசாணை வெளியிடுவதில் காலதாமதம் இன்னும் தொடா்கிறது. இந்த கோரிக்கையை எம்எல்ஏ மீண்டும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என பா்கூா் மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT