ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பரத் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்கள். இந்திய டெஸ்ட் அணிக்கான தொப்பியை சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரியும் பரத்துக்கு புஜாராவும் வழங்கினார்கள். அதேபோல ஆஸி. அணியில் மர்பி அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் சூர்யகுமார், பரத் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், டெஸ்ட் ஆட்டத்தை நேரில் பார்க்க வந்துள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இருவருக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். பரத்தின் தாய் தன் மகனுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.