செய்திகள்

மகளிர் ஐபிஎல்: அதிக தொகைக்கு தேர்வான இந்திய மகளிர்!  

DIN

5 அணிகள், ஒட்டுமொத்தமாக 22 ஆட்டங்கள், ஒவ்வொரு அணியிலும் 18 வீராங்கனைகள். ஆறு வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி. ஆட்டத்தில் விளையாடும் 11 வீராங்கனைகளில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த 5 வீராங்கனைகளில் ஒரு வீராங்கனை அசோசியேட் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையையும் ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ரூ. 951 கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ. 7.09 கோடி. இந்த உரிமை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அனைத்து விதமான ஊடகங்களுக்கும் (தொலைக்காட்சி, டிஜிடல்) பொருந்தும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. 

மகளிர் ஐபிஎல் மும்பையில் மார்ச் 4 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டி.ஒய்.பாட்டில் ஆடுகளத்தில் தொடக்க ஆட்டம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்ற 1525 வீராங்கனைகள் பதிவு செய்த நிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுள்ளனர். 246 இந்திய வீராங்கனைகலும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் வருகிற 13ஆம் தேதி மும்பையில் நடக்கும் ஏலத்தில் பங்கெபெறுவர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி சர்மா, ஷெபாலி வர்மா உள்ளிட்ட முக்கியமான 24 வீராங்கனைகள் அதிகபட்சமான விலை ரூ.50 இலட்சத்திற்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர். 

ஏலம் பிப்.13ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு நடைபெறும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT