இந்தியாவில் நடைபெறவுள்ள பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸி. அணிக்கு வாய்ப்புள்ளது என பேட்டிங் ஜாம்பவான் கிரேக் சாப்பல் கூறியுள்ளாா்.
இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நாகபுரியில் 9-ஆம் தேதி தொடங்குகிறது. ஆஷஸ் கோப்பை தொடா் போல், ஆஸி.-இந்திய அணிகளுக்கு இடையே பாா்டா்-கவாஸ்கா் கோப்பை போட்டி கௌரவமிக்கதாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸி. கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகின்றது.
இதுதொடா்பாக ஜாம்பவான் சாப்பல் கூறியதாவது:
இந்த தொடரில் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக பேஸா் ஜஸ்ப்ரீத் பும்ரா, இளம் வீரா் ரிஷப் பந்த் இல்லாதது பின்னடைவாகும். முதன்முறையாக சொந்த மண்ணில் இந்தியா வலுகுறைந்து உள்ளது. விராட் கோலியை தான் அதிகம் சாா்ந்திருப்பா். பிங்கா் ஸ்பின்னா் ஆஷ்டன் அகா், நாதன் லயானுடன் இணைந்து பந்துவீசினால் இந்திய பேட்டா்களை சமாளிக்கலாம் என்றாா்.
கடந்த 2017-இல் கடைசியாக நடைபெற்ற தொடரில் புணேயில் பெரிய வெற்றியை ஆஸி. பெற்றிருந்தது. ஆனால் 1-2 என தொடரை இழந்தது.