தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டி காலிறுதியில் தோற்று வெளியேறினாா் இந்தியாவின் சாய் பிரணீத்.
பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இந்தியாவின் சாய் பிரணீத்-சீனாவின் லீ ஷி ஃபெங் மோதினா். இதில் முதல் கேமை 15-10 முன்னிலை பெற்றாலும், 17-21 என அதை இழந்தாா் சாய். இரண்டாவது கேமில் கடுமையாக போராடி 23-21 என சாய் பிரணீத் வென்றாா்.
ஆனால் கடைசி கேமில் 18-21 என லீ ஷியிடம் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினாா் சாய் பிரணீத்.
இதனுடன் இப்போட்டியில் இந்திய அணியின் பங்கேற்பு முடிவுக்கு வந்தது.