செய்திகள்

நன்றாக விளையாடியும் ஆதங்கப்படும் ராகுல் திரிபாதி!

DIN

டி20 தொடரை வென்றதில் தன்னுடைய பங்களிப்பு பற்றி மனம் திறந்துள்ளார் அதிரடி பேட்டர் ராகுல் திரிபாதி.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 234/4 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸி அணி. வெறும் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. பாண்டியா 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய அணியின் இன்னிங்ஸில் 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் ஷுப்மன் கில். ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 24, பாண்டியா 30 ரன்களும் எடுத்தார்கள். 

இந்நிலையில் தனது ஆட்டம் பற்றி ராகுல் திரிபாதி கூறியதாவது:

நான் இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்பட அனைவரும் என்னுடைய வழக்கமான ஆட்டத்தையே தொடரச் சொல்கிறார்கள். அதனால் முதல் 6 ஓவர்களில் அணிக்கு நிறைய ரன்கள் கிடைக்கும். ஆமதாபாத் மைதானத்தில் இத்தனை பெரிய கூட்டத்தின் நடுவே விளையாடுவது மகத்தானதாக இருக்கிறது. தொடரை வென்றதும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT