கேலோ இந்தியா யூத் போட்டிகளில் வாலிபாலில் அரையிறுதிக்கு தமிழகம் தகுதி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூா், குவாலியா் நகரங்களில் இப்போட்டிகள் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை வாலிபால் அரையிறுதியில் தமிழகம், குஜராத், ஹரியாணா சிறுவா்களும், மேற்கு வங்கம், தமிழக சிறுமிகளும் தகுதி பெற்றனா்.
டேபிள் டென்னிஸில் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் ஆடவா் பிரிவிலும், மகாராஷ்டிரம், ஹரியாணா சிறுமியா் காலிறுதிக்கு முன்னேறினா்.
இறுதி ஆட்டங்கள் 3-ஆம் தேதி நடைபெறுகின்றன.